RojaRaman's

RojaRaman's

Wednesday 29 June 2011

நட்பில் மயங்கினேன் !!!!

நாட்கள் மாறினாலும்
நம் நட்பு மாறாது.....
வானத்துக்கு பூமி எல்லை என்றாள்
நம் அன்புக்கு நம் மனம்தான் எல்லை.....
பூத்து குலுங்கும் பூக்களின் அழகை விட
நம் நட்பு இன்னும் அழகானது.....
அதனால்தான் பூக்களுக்கு நம் மீது
கொஞ்சம் பொறாமை......
வானத்தில் மேகக்கூட்டங்கள் இருந்தாலும்
அது.....பூமியை மறப்பதில்லை....
அதனால்தான் எப்பொழுதும் மழையாக பொழிகிறது.....
அதேபோல்தான்....
நான் எங்கு இருந்தாலும்....
உன்னை நினைப்பதை மறப்பதில்லை....
உன்னுடன் நட்பில் மயங்கிய என் மனம்
மௌனமாகிறது மற்றவர்களின் நட்பை ஏற்கும்போது.....!!!!!

Tuesday 21 June 2011

"என்றென்றும் நினைவுகளுடன்"

என் நெஞ்சோடு வந்தாய் 
என் கண்ணோடு கானல் நீராய் மறைந்தாய் 
உன்னோடு தான் பேசமுடியவில்லை ....
கனவோடு பேசலாம் என்றால்
 உன் நினைவுகள் என்னை தூங்கவும் விடுவதில்லை
-----என்றென்றும் நினைவுகளுடன்---- 

Thursday 16 June 2011

நண்பனின் (பிரிவு) நினைவலைகள் கலங்குகிறது கண்கள்(பிரிவு&நினைவு) ,,,,,,,நண்பா,,,,,,,,,


இறந்த என் நண்பனின் நினைவுகள்,,,,,,, 

என்னை அழ வைக்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 

பழைய புகைப்படங்கள் புரட்டிய பொழுது,,,,,,, 

உறைந்த நிலையில் நான் என்னை பார்த்து சிரித்தபடி அவன்... 
நண்பா ,,,,,,,,,,,,,

உன் நினைவுகளுடன் நித்திரை ..தொடருமா ?.....

தூங்கும் போதும் உன்னை நினைத்து கொண்டே தூங்குகிறேன் ...
ஏன் தெரியுமா ???

மூடும் விழிகள் மீண்டும் திறக்கா விட்டால்
உன் நினைவோடு பிரிவதற்கு........... என்றென்றும் நினைவுகளுடன்.........