RojaRaman's

RojaRaman's

Friday 5 August 2011



எங்கிருக்கிறாய் நீ........... நிலவே

நலம் தானா நீ?
உன்னிடம்நலம் கேட்கவும் பலம் இல்லையே எனக்கு.....
உன் நினைவுகளை 
தோண்டத்தோண்ட
கண்ணீர் தான்
சுரந்து வருகிறது.....
ஓரு செய்க்கை மரணம்சாகடித்துவிட்டது என்னை

என் இதயம் இப்போது,
என்னிடமும் இல்லை,உன்னிடமும் இல்லை.
இப்போது என்னிடம் இருப்பதெல்லாம்,
உன்,பாவமில்லாத கடிதங்களும்,
ஓர்,இறந்து போன உயிரும் தான்.
இயலவில்லை என்னால் இயலவில்லை.....................​.

ஒரு பேரலை,

ஓரு நிலச்சரிவு,

ஓரு காட்டுத்தீ,

ஒரு மின்னல்,

ஓரு புயல்,

ஒரு பூகம்பம்,

இத்தனையும் கலந்த,

ஒருபெயர் வைக்கப்படாத
இயற்க்கை அனர்த்தம்,என்னுள்.............​....
என்ன செய்ய முடியும் என்னால்,
ஏராளமான இரவுகளை சேமித்து வைத்து
உனக்காக,

உறங்கா விரதம் இருக்கிறேன்,நான்.............
எங்கிருக்கிறாய் நீ........... நிலவே!!(