RojaRaman's

RojaRaman's

Saturday 30 July 2011


குழந்தையாய் நீ
சிணுங்கும் போதெல்லாம்
சொல்ல நினைக்கிறேன்
கண்ணே என் மடி சாய்ந்து
சுகமாய் தூங்கு என்று 


உன் தலை முடி கலைந்து
குழந்தையாய் வந்து நிற்கும் போது
குழந்தையை போல் அரவணைத்து
உன் நெற்றியில் முத்தமிட
ஏங்குகிறேன் - உன்
விழி சோகம் உணரும் போது
தாயாய் உன்னை தாங்கவும்
தனிமையை நீ உணரும் போது
உன் அருகிருக்கவும்
எதுவும் இன்றி நிற்கதியாய் நிற்கும் போது
உடன்பிறப்பாய் உன்னோடு வரவும்
உன் நல்ல இதயம் அழுக்கடையும் போது
நல் வழி காட்ட குருவாய் இருக்கவும்
மொத்தத்தில் உன்னோடு தொடரவும்
வேண்டுகிறேன் உன்னிடம் ..........!
நிலவே !!!

Friday 22 July 2011

என் நிலவை பிரிந்த நாட்கள்!!!

உன்னை காணாத இந்த இரவு .....

உன்னை பார்க்காத இந்த இரவுகள் ......

உன்னை மட்டுமே தேடிக்கொண்டிருக்கும் இந்த விழிகள் !!!
மேக கூட்டத்தில் என் விழிகள் நடனமாடிக்கொண்டு !!!

இந்த நடனத்திற்கு ஓய்வு ...............
என்னை பற்றிய உன் ஆய்வாகத்தான்  இருக்கும்!!!!

உன்னை காண துடிக்கும் இந்த விழிகள் !!
உன்னை காணும்  நொடிப்பொழுதை அடையும் வரை !
இதுவரை செலவழிக்கும் இனிமையான சித்ரவதைகளெல்லாம் உனக்கே சமர்ப்பணம் !!!!!!!!!!!!!!!!என் நிலவே !!!

Wednesday 13 July 2011

எல்லா பகலும் இரவாய்

என் நினைவலைகளை எல்லாம் வட்டமாய் அடக்கி 
என்னவள் நிலாவை நான் ரசித்துகொண்டிருகும்போது 

சிறு சிறு எதிரிகளாய் மேகக்கூட்டங்கள் இருப்பினும்
முகம் காண சுவாரஸ்யமே முடிவிலியாய்!!

எல்லா பகலும் இரவாய் இருந்து விடவேண்டும் போல் தோன்றுகிறது !!!


எல்லா பகலும் இரவாய் இருந்தால் எவ்வாறு இருக்கும் ????

Saturday 9 July 2011

தனிமை!!!!!!!!

சொந்தங்கள்
நடுவில் இருந்த போது
கவலையின் வலி
தெரியவில்லை..
நண்பர்களுக்கு
இடையில்
இருந்த போது
மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை ..
இன்று
தனியாய் இருக்கும்
போது தெரிகிறது
தனிமையின் கொடுமை.......!!!­ ­

Sunday 3 July 2011

நட்பின் நனைவுகள்

நட்பு வட்டாரம் அருகில் இருக்கும் போது 

நினைத்துகூட பார்க்காத விஷயங்கள்...
இல்லாதபோது நினைக்க வைத்து வருத்தி கொண்டிருக்கிறது,,,,,,

ஆற்றின் நடுவே உள்ள பாறையை  போல நானும் ..


என் மேல் உருண்டோடும் நீராய் உந்தன் நினைவுகள் என் மேல் முட்டி மோதி 

நனைத்து கொண்டிருக்கிறது..... நட்புக்களே !!!
நட்பின் நனைவுகளாய் ..என்றென்றும் நினைவுகளுடன் ....RS

Saturday 2 July 2011

உயிரற்று போய் .....


அழகான கவிதையின் 

முதல் வரி நீ 

கடைசி வரி நான் 

தெரியாமல் கூட பிரிந்து விடாதே 

நான் அர்த்தமற்று போய் விடுவேன்..,