RojaRaman's

RojaRaman's

Saturday 30 July 2011


குழந்தையாய் நீ
சிணுங்கும் போதெல்லாம்
சொல்ல நினைக்கிறேன்
கண்ணே என் மடி சாய்ந்து
சுகமாய் தூங்கு என்று 


உன் தலை முடி கலைந்து
குழந்தையாய் வந்து நிற்கும் போது
குழந்தையை போல் அரவணைத்து
உன் நெற்றியில் முத்தமிட
ஏங்குகிறேன் - உன்
விழி சோகம் உணரும் போது
தாயாய் உன்னை தாங்கவும்
தனிமையை நீ உணரும் போது
உன் அருகிருக்கவும்
எதுவும் இன்றி நிற்கதியாய் நிற்கும் போது
உடன்பிறப்பாய் உன்னோடு வரவும்
உன் நல்ல இதயம் அழுக்கடையும் போது
நல் வழி காட்ட குருவாய் இருக்கவும்
மொத்தத்தில் உன்னோடு தொடரவும்
வேண்டுகிறேன் உன்னிடம் ..........!
நிலவே !!!

No comments:

Post a Comment